×

கீழக்கரை ஜிஹெச்சில் டாக்டர்கள் பற்றாக்குறையால் காத்திருக்கும் நோயாளிகள்


கீழக்கரை,பிப்.11:  கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கீழக்கரையை சுற்றியுள்ள மாயாகுளம், முள்ளுவாடி, காஞ்சிரங்குடி, மோர்குளம், கும்பிடு மதுரை, நத்தம், குளபதம், தில்லையேந்தல் போன்ற 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் அவசர மருத்துவத்திற்கும் மற்றும் இதர மருத்துவத்திற்கும் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு தான் வரவேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில் வெளிநோயாளிகள் வருகை அதிகமானதால், மருத்துவர்கள் நோயாளிகளை விரைவாக பரிசோதனை செய்ய முடியவில்லை. குழந்தைகள் முதல் முதியோர் வரை பல்வேறு நோய்களுக்காக மருத்துவமனை வருகின்றனர். மருத்துவமனையில், போதியளவு டாக்டர்கள் பணியில் இல்லாததால், நோயாளிகளை விரைந்து மருத்துவம் பார்க்க முடியாதலால், வெகுநேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எனவே அரசு மருத்துவமனையில், மருத்துவர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : doctors ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை