×

மீனவர்களுக்கு இலவச வீட்டுமனை கலெக்டரிடம் கோரிக்கை

கீழக்கரை, பிப்.11:  கீழக்கரை அருகே உள்ள சேதுக்கரை மீனவர்கள் வசிப்பதற்கு சொந்த வீடு இல்லாமல் அரசு புறம்போக்கு இடங்களிலும், தேவஸ்தானம் இடங்களிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு இடங்களில் இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும் என்று சேதுக்கரை ஊராட்சி மன்ற துணை தலைவர் சாகுல் ஹமீது தலைமையில், ராமநாதபுரத்தில் கலெக்டரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ‘‘சேதுக்கரை பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் 4 தலைமுறையாக இப்பகுதியில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் தற்போது அரசு புறம்போக்கு இடங்களிலும், தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடங்களிலும் தற்காலிகமாக குடிசை போட்டு தங்கி இருக்கின்றனர்.
இவ்வாறு இருப்பதால் அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியாமலும், வீட்டிற்கு மின் இணைப்பு பெற முடியாமலும் தவித்து வருகின்றனர். இதனால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே இப்பகுதி மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் உள்ள அரசு இடங்களை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து இவர்களுக்கு இலவசமாக வீட்டுமனை வழங்க வேண்டும்’’ இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : housing collector ,fishermen ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...