×

காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்

மதுரை, பிப். 11: மதுரையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. பேச்சியம்மன் படித்துறையில் நிர்வாகி ராதாகிருஷ்ணன், தெற்குவாசல் பள்ளிவாசலில் காசிராஜன், கீரைத்துரையில் சுந்தர், ஆரப்பாளையம் கிராஸ்ரோட்டில் காளிதாஸ், செல்லூர் 50 அடி ரோட்டில் நிர்வாகி பால்ராஜ், ஜெய்ஹிந்த்புரத்தில் மீனாட்சிசுந்தரம், சொக்கலிங்கநகரில் மணிமாறன் முன்னிலை வகித்தனர். கூட்டங்களில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாஹசன்,மாநில செயலாளர் முருகன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress Street Campaign Meeting ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு