×

மேலூர் அருகே விவசாயி கொலையில் 4 பேர் கைது

மேலூர், பிப். 11: மேலூர் அருகே டூவீலரை மறித்து விவசாயி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலூர் அருகே கொட்டகுடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது அண்ணன் மகன் திவாகருடன் சேர்ந்து ஒரு திருமணத்திற்கு டூவீலரில் சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, இவர்களை பின் தொடர்ந்து டூவீலர்களில் வந்த சிலர் கொட்டகுடி விலக்கில் இருவரையும் றித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ராமச்சந்திரன் பலியானார். படுகாயத்துடன் திவாகர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் நேற்று இக்கொலை வழக்கில் கொட்டகுடியை சேர்ந்த ராமசாமி (58), ஆதி (35), பிரபாகர் (25), அன்பு (25) ஆகியோரை கைது செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு ராமசாமியை முன்விரோதம் காரணமாக ராமச்சந்திரன் கொலை செய்ய முயன்றதாகவும், அதற்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் அவரை கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Tags : Melur ,
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி