திண்டுக்கல், பிப்.11: திண்டுக்கல் மாநகராட்சி 40வது வார்டு மறைஞான நகரில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அப்பகுதியில் குழாய் பழுது வேலை நடப்பதால் தண்ணீர் விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் சரி செய்து விடுவோம். அதுவரை லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.