×

திமுக விவசாய அணி குற்றச்சாட்டு சீர்மரபினருக்கு ஒரே சாதி சான்று கோரி அமைச்சரிடம் விவசாயிகள் மனு

திருச்சி, பிப்.11: சீர்மரபினருக்கு ஒரே சாதி சான்று வழங்க கோரி அமைச்சரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர். தமிழகத்தில் உள்ள 68 சமூக சீர்மரபினர் மக்களுக்கு 1979 வரை பழங்குடி சீர்மரபினர் (டிஎன்டி) என்று சாதிசான்று வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1979ம் ஆண்டில் அரசு உத்தரவில் டிஎன்டி என்பதற்கு பதில் சீர்மரபினர் ஜாதி (டிஎன்சி) என சாதிசான்று மாற்றப்பட்டது. இதனால் பழங்குடி மாணவர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட கட்டணமில்லா கல்வி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

டிஎன்டி என சாதி சான்று வழங்க கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நேற்று அமைச்சர் வளர்மதி வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் வீட்டருகே காத்திருந்தனர். தொடர்ந்து மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்து விட்டு வீட்டுக்கு வந்த அமைச்சரிடம் மனு அளித்து சென்றனர்

Tags : minister ,agriculture team chargesheeter ,DMK ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...