×

மணப்பாறை அருகே எடைமேடையில் புகுந்த சாரை பாம்பு பிடிபட்டது

மணப்பாறை, பிப்.11: திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் எடைமேடை வைத்து நடத்தி வருபவர் நல்லு மகன் பாலசுப்பிரமணியன். எடைமேடைக்கு அருகில் உள்ள அறையில் நேற்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது 6 அடி நீள மஞ்சள் சாரை பாம்பு ஒன்று அந்த அறைக்குள் புகுந்தது. இதனையடுத்து பாலசுப்பிரமணியன் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மணப்பாறை தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை வீரர்கள் 6 அடி நீள மஞ்சள் சாரை பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Manapparai ,
× RELATED மணப்பாறை அருகே கிராவல் மண்...