ஐதராபாத்: ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. புகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது தரையில் வேகமாக விமானம் மோதியதில் முன்பக்க டயர் வெடித்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. விபத்தை அடுத்து புகெட் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
