×

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் மணல்மேட்டில் இருந்து சீர்காழி வழியாக சென்னைக்கு இயக்கிய அரசு பேருந்து நிறுத்தம்

சீர்காழி, பிப். 11: மணல்மேட்டில் இருந்து சீர்காழி வழியாக சென்னைக்கு இயக்கிய அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சீர்காழி அருகே மணல்மேட்டில் இருந்து வைத்தீஸ்வரன்கோவில் சீர்காழி வழியாக சென்னைக்கு 2016ம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டெப்போவில் இருந்து இயக்கப்பட்டு வந்த தடம் எண் 142 அரசு பேருந்து திடீரென கடந்த 12 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மணல்மேடு, பட்டவர்த்தி, திருவாளப்புத்தூர், சேத்தூர், திருப்புங்கூர், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் பல்வேறு பணிகளுக்காக சென்னை செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். மணல்மேட்டில் காலை 8:30 மணிக்கும், இரவு 10 மணிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stop ,Government ,Sand ,Sirkazhi ,Chennai ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...