×

கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 95 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர், பிப்.11: கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களில ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.கரூர் பகுதியில் அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ சார்பில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறி ஒன்று கூடியதாக, இந்த போராட்டங்களில் ஈடுபட்ட 95 பேர் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இதே போல், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபட்ட 140க்கும் மேற்பட்டோர்கள் மீது அந்தந்த காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : protesters ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...