×

கரூர் அருகே ஏமூர் தனியார் குடோனில் ரூ.15 லட்சம் மதிப்பு சிமெண்ட் மூட்டைகளை விற்று மோசடி ஊழியர் மீது வழக்குப்பதிவு'

கரூர், பிப். 11: ஏமூரில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் குடோனில் ரூ.15 லட்சம் அளவில் சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்து மோசடி நடைபெற்றதாக வந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம், ஏமூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளது. இந்த குடோனில் கடந்த மாதம் சேலம் மண்டல அதிகாரியாக பணியாற்றி வரும் சிவராமகிருஷ்ணன் என்பவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஏமூர் குடோன் பொறுப்பாளராக பணியாற்றி வந்த ஆத்துரைச் சேர்ந்த ரமணன் என்பவர், ரூ.15 லட்சம் மதிப்புள்ள 185.5 மெட்ரிக் டன் எடையுள்ள சிமெண்ட் மூட்டைகளை விற்பனை செய்து மோசடி செய்ததாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரமணன் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : godown ,Amur ,Karur ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்