×

அனைத்து துறை சங்க ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.11: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தாலுகா அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில விஜயகுமார் தலைமை வகித்தார். மகாவிஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில், நிர்வாகிகள் அரசகுமார், பாபு உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மறியல் போராட்டம் செய்து வரும் அரசு ஊழியர்கள், காலமுறை ஊதியத்திற்காக போராடும் வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் சங்கங்களை அழைத்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஎஸ்ஐ ரத்து செய்ய வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : Demonstration ,All Sector Associations Coordinating Committee ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்