×

மயங்கி கிடந்த மூதாட்டி சாவு

சேலம், பிப்.11: சேலம் மாவட்டம், காகாபாளையம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள பேக்கரி முன்பு, கடந்த மாதம் 29ம் தேதி, 80 வயது மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 3ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Death ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...