×

மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க குடும்பத்தினர் மனு

சேலம், பிப். 11: சேலத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டவர்களை  விடுவிக்க வலியுறுத்தி, அவர்களது குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கணவாய்புதூர் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிவாசகம். மாவோயிஸ்டான இவர், கடந்த ஆண்டு கேரள வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆதரவாளர்களும், அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தினரும் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரிகள் சந்திரா, லட்சுமி, மைத்துனர் சாலிவாகனன் உட்பட 6 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய மின்னாம்பள்ளியைச் சேர்ந்த செல்வராஜ், ஓமலூரைச் சேர்ந்த பாலன் மற்றும் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர், கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பாலனின் தாயார் வசந்தா, செல்வராஜின் மனைவி அஞ்சலி மற்றும் சீனிவாசனின் மனைவி ராஜேஸ்வரி ஆகிய 3 பேரும், நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘கைது செய்யப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக இருந்ததாக போலீசார் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே, பொய் வழக்குகளை திரும்ப பெற்று, அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : detainees ,supporters ,Maoist ,
× RELATED நெல்லை பாஜக வேட்பாளர் நயினார்...