×

அரசு ஊழியர்கள் 9வது நாளாக மறியல் 50 பேர் கைது

கிருஷ்ணகிரி, பிப்.11: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அண்ணாசிலை எதிரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று 9வது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மீன்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயாலாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் தேவராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மறியலில் ஈடுபட்ட 27 பெண் ஊழியர்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அனைவரையும் மாலையில் விடுவித்தனர்.

Tags : servants ,protest ,
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து