×

சூதாடிய 2 பெண்கள் கைது

கிருஷ்ணகிரி, பிப்.11:  கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீஸ் எஸ்.ஐ சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார், பிஆர்ஜி மாதேப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த திருப்பத்தூர் மாவட்டம் மணவாளம் அம்பேத்கர்புரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மனைவி ராஜேஸ்வரி (23), அதே ஊரை சேர்ந்த சேகர் மனைவி பூங்கொடி(எ) முனியம்மாள் (50) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags : women ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது