×

வால்மீகி சமுதாய மக்களை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் சத்யா எம்எல்ஏ மனு

ஓசூர், பிப்.11: வால்மீகி சமுதாய மக்களை எஸ்டி பிரிவில் சேர்க்க வேண்டும் என எஸ்சி, எஸ்டி பிரிவு முதன்மை செயலாளருக்கு ஓசூர் சத்யா எம்எல்ஏ மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் வால்மீகி சமுதாய மக்கள் பெருமளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக, ஓசூரில் அதிகம் வால்மீகி சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கர்நாடகா மற்றும் ஆந்திராவில் அவர்களுக்கு மலைவாழ் மக்களாக பாவித்து, எஸ்டி பிரிவில் சேர்த்து மத்திய மாநில அரசின் சலுகைகள் கிடைக்கப் பெற்று வருகின்றனர். எனவே, வால்மீகி சமுதாய மக்களை மலைவாழ் மக்களின் எஸ்டி பட்டியலில் இணைத்து, மத்திய மாநில அரசின் சலுகைகளை கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Satya MLA ,Valmiki ,
× RELATED அயோத்தி விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி பெயர்