×

மின்விளக்கு பழுதால் இருளில் மூழ்கிய குப்பாங்கரை சாலை வாகன ஓட்டிகள் அவதி

காரிமங்கலம், பிப்.11: காரிமங்கலம் அருகே மாட்லாம்பட்டி - குப்பாங்கரை பிரிவு சாலையில், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இப்பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் நான்கு வழிச்சாலையை பராமரிக்கும் தனியார் நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த திமுக ஆட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ₹5லட்சம் மதிப்பில், உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக எரியாததால், இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மின்கோபுர விளக்கை, ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,road ,Kuppangarai ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி