×

குடித்து விட்டு தகராறு செய்த வாலிபர் அடித்துக் கொலை தாய், தம்பி கைது

முஷ்ணம், பிப். 11: முஷ்ணத்தில் குடித்து விட்டு தகராறு செய்து வந்த வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் முஷ்ணம் வானக்கார தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் பாஸ்கரன் (36). வெளிநாட்டில் வேலை செய்து வந்த பாஸ்கரன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு வந்து விட்டார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பாஸ்கரன் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். மேலும் தெருவில் உள்ளவர்களிடமும் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் (9ம் தேதி) இரவு பாஸ்கரன், வழக்கம்போல் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் குப்பாயி, தம்பி பிரபாகரன் (31) ஆகியோர் பாஸ்கரனை கம்பியால் கட்டி இழுத்து கட்டை கழி மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.  இதில் பாஸ்கரன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து முஷ்ணம் கிராம நிர்வாக அலுவலர் ரங்கசாமி,  முஷ்ணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வினதா  மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பாஸ்கரன் சடலத்தை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சேத்தியாதோப்பு டிஎஸ்பி சுந்தரம் சம்பவ  இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.இதனையடுத்து முஷ்ணம் போலீசார் பாஸ்கரனின் தாய் குப்பாயி, தம்பி பிரபாகரன் ஆகியோரை  கைது செய்தனர்.குடித்து விட்டு தகராறு செய்த வாலிபரை தாய் மற்றும் தம்பி அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : brother ,
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...