விழுப்புரம், பிப். 11: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் இன்று ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாகவும், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று (11ம் தேதி) அமாவாசையன்று பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அன்றைய தினம் அங்காளம்மன் கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனைத்துவகையான தரிசனங்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.