×

கீழப்பாவூரில் இன்று முதல் 3 நாள் ஆதார் சிறப்பு முகாம்

பாவூர்சத்திரம், பிப்.11: பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் இன்று தொடங்கி 13ம்தேதி வரை  3 நாட்கள் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கீழப்பாவூர் அஞ்சல் துறை, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண்தான விழிப்புணர்வு குழு சார்பில் குருசாமி கோயில் திருமண மகாலில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமிற்கு அரிமா சங்கத்தலைவர் கவுதமன் தலைமை வகிக்கிறார். கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பாண்டியராஜ் முன்னிலை வகிக்கிறார். கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பால்துரை தொடங்கி வைக்கிறார். முகாமில் ஆதாரில் பெயர், முகவரி திருத்தம், செல்போன் எண் சேர்க்கை, திருத்தம், புதிய கார்டு எடுத்தல், 5வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பழைய கார்டு புதுப்பித்தல் போன்ற சேவைகளை பெறலாம்.

Tags : Aadhar Special Camp ,
× RELATED பதிவு மற்றும் திருத்தம் செய்ய அஞ்சலகங்களில் நாளை ஆதார் சிறப்பு முகாம்