×

ரூ.1 கோடியில் பேவர் பிளாக் சாலை இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பணகுடி, பிப்.11: வள்ளியூர், திசையன்விளையில் ரூ.1 கோடியில் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணியை இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். ராதாபுரம் கிழக்கு ஒன்றியம் திசையன்விளையில் ரூ.70 லட்சத்தில் புளியடி தெரு, வாசகசாலை தெரு, மணலிவிளை முத்தாரம்மன் கோயில் தெரு, கண்ணபிரான் தெரு, காமராஜ் சிவகாமி அம்மையார் தெரு ஆகிய பகுதிகளுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளின் துவக்க விழா நடந்தது. இன்பதுரை எம்எல்ஏ பங்கேற்று பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராதாபுரம் மேற்கு அந்தோணி அமலராஜா, கிழக்கு செல்வராஜ், திசையன்விளை ஜெயக்குமார், வக்கீல் பழனிசங்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் வள்ளியூர் 1வது வார்டு தேவர் பெரிய தெருவில் ரூ.30லட்சத்தில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடந்தது. இன்பதுரை எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், நகர செயலாளர் பொன்னரசு, அரசு வக்கீல் கல்யாணகுமார், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சண்முகபாண்டி, பொறியாளர் விஜயகுமார், தேமுதிக மாவட்ட துணை செயலாளர் விஜிவேலாயுதம், நகர துணைச்செயலாளர் கல்யாணசுந்தரம், எட்வர்ட் சிங், ராஜா ராம்மோகன், சந்திரமோகன், சங்கர், ஈஸ்வரமூர்த்தி, வக்கீல் சங்கரன், முருகேசன், முத்துலிங்கம், சுப்புலட்சுமி, அருணாசலம், சுந்தரி, சுடலைகண், சிவா, ஈஸ்வரபாண்டி, சந்திரேஸ் மற்றும்  பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...