×

விளாத்திகுளத்தில் குடோனில் பதுக்கிய ரூ.3.50லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

விளாத்திகுளம்,பிப்.11:  விளாத்திகுளம் பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விளாத்திகுளம் போலீசார் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது விளாத்திகுளம் அரசுடமையாக்கப்பட்ட வங்கி அருகே ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான குடோனில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் விற்பனைக்காக ரூ.3.50லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை டிஎஸ்பி பிரகாஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஜெயராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Vilathikulam ,godown ,
× RELATED ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில்...