×

கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது கலசபாக்கம் அருகே

கலசபாக்கம், பிப்.11: கலசபாக்கம் அருகே எம்ஏ படித்துவிட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்(45). எம்ஏ படித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அருள் அதே கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருவதுடன், நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மருத்துவ அலுவலர் ரம்யாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மருத்துவ அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட கிளினிக்கில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, அருள் அங்குள்ள நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து, கிளினிக்கில் இருந்த ஆங்கில மருந்து மாத்திரைகள், ஊசி போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலி டாக்டர் அருளை கலசபாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும், அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அருளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : doctor ,clinic ,Kalasapakkam ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!