×

காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் தனியார்துறையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சி புரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிக்கை. படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக் கிழமைகளில், இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி நாளை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காஞ்சி, செங்கை மாவட்டங்களில் உள்ள நிறுவனங்கள் இன்டிமேட் பேசன்ஸ், மொபிஸ், ரைசிங் ஸ்டார், மதர்சன், மின்டா கார்பரேஷன் பிரைவேட் லிமிடேட் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
அப்போது, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ டிப்ளமோ, தையல் பயிற்சி மற்றும் பட்டம் படித்தவர்களை செய்ய உள்ளனர். மேற்கண்ட கல்வி தகுதியுடையவர்கள், தங்களது அசல் கல்வி சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : employment camp ,Office ,Kanchi Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...