×

திண்டிவனம் அருகே வீட்டில் திருடிய வழக்கில் வாலிபர் அதிரடி கைது

திண்டிவனம், பிப்.  9: திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.  திண்டிவனம் அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆறுமுகம் (49).  இவரது வீட்டின் பின்பக்க கதவை கடந்த செப்டம்பர் மாதம் 27ம்தேதி மர்ம நபர்கள் உடைத்து வீட்டிலிருந்த 19 கிராம் தங்க நகைகள், 60 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 2,500 ரூபாய் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.  இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் கணேசன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள், போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பல்லாவரம், திரிசூலம் கல்லறை தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன்(26), என்பவரை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.  
 விசாரணையில் ஆறுமுகம் வீட்டில் கதவை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 14 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : house ,Tindivanam ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்