×

பாவூர்சத்திரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பாவூர்சத்திரம், பிப்.10: பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படிக்கும் 55 மாணவ- மாணவிகளுக்கும், திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 51 மாணவ- மாணவிகளுக்கும், ஆவுடையானூர்-மாடியனூரில் உள்ள பாளையம் ஆ.பொன்னுச்சாமி நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 130 மாணவ- மாணவிகளுக்கும், ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியில் 401 மாணவ மாணவிகளுக்கும் மொத்தம் 637 இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சிகளில் பள்ளி தலைமைஆசிரியர்கள் வெங்கடேசன் (குறும்பலாப்பேரி), சந்திரசேகர் (திப்பணம்பட்டி), தேவதாசன் (மாடியனூர்), ஜோசப் (ஆவுடையானூர்), புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மோயீசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ், இருளப்பன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் காத்தவராயன் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் கடந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் தனது சொந்த நிதியிலிருந்து செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கி பாராட்டினார்.

Tags : school children ,Pavoorchatram ,
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்