×

நெல்லை மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் மாற்ற கலெக்டர் அதிரடி உத்தரவு

நெல்லை, பிப். 10: நெல்லை மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் இறுதி பட்டியல் கடந்த மாதம் வெளியானதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் தாசில்தார் காலி பணியிடங்களுக்கு, கடந்த மாத இறுதியில் தாசில்தார்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இருவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 4 தாசில்தார்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். அதுகுறித்த விவரம் வருமாறு: நெல்லை டாஸ்மாக் உதவி ேமலாளர் (சில்லறை விற்பனை) சந்திரன் நெல்லை கேபிள் டிவி தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த மோகன் நெல்லை டாஸ்மாக் உதவி மேலாளராக (சில்லறை விற்பனை) மாற்றப்பட்டுள்ளார். பாளை. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செலின் கலைச்செல்வி மானூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், இந்த பதவியில் இருந்த கோமதி சங்கரநாராயணன் பாளையங்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Collector ,district ,Nellai ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...