×

தூத்துக்குடி, கோவில்பட்டியில் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி, கோவில்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மினி கிளினிக் அமைக்க துணை சுகாதார மையங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிடவேண்டும், மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை பணியில் அமர்த்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களை பள்ளி தடுப்பூசி பணியில் இருந்து விடுவிக்கவேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாப்பிள்ளையூரணியிலுள்ள தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொன் சாந்தகுமாரி தலைமை வகித்தார்.  மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலெட்சுமி, மாவட்ட செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச்செயலாளர்  நிர்மலாமேரி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில், மாவட்ட துணைத்தலைவர் வெரோனிகா, மாவட்ட பிரசாரக்குழு செயலாளர் தங்கம், கூட்டமைப்பு தலைவர் ராஜலட்சுமி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சந்திரா நன்றி கூறினார்.கோவில்பட்டி: கோவில்பட்டியில் கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். மாநில பொதுச் செயலாளர் பாப்பா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் கஸ்தூரி, மாவட்ட பொருளாளர் இந்திரா, மாவட்ட துணைத்தலைவர் ரமணி பாய், மாவட்ட இணைச் செயலாளர் ரெங்கநாயகி, மாவட்ட அமைப்பு செயலாளர் நாச்சியார், மாவட்ட பிரசார பிரிவு செயலாளர் சாந்தி குட்டி மற்றும் கோவில்பட்டி சுகாதார மாவட்டத்துக்குட்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Village Health Nurses ,Kovilpatti ,Thoothukudi ,
× RELATED கனிமொழி எம்பியை ஆதரித்து கோவில்பட்டி,...