×

பொன்னமராவதியில் 487 கிலோ குட்கா, தார் ஜீப் பறிமுதல்

*இரண்டு வட மாநில இளைஞர்கள் கைது

பொன்னமராவதி : பொன்னமராவதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 487 கிலோ குட்கா, சொகுசு தார் ஜீப், வட மாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா அறிவுறுத்தலின்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்கு தடைவிதித்தும் மீறி விற்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்று தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில் பின்புறம் மறைவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன் பதிவு எண் கொண்ட சிகப்பு நிற ஜீப் இருப்பதை விசாரணை மேற்கொண்ட பொழுது அங்கிருந்த இரண்டு வட மாநில இளைஞர்கள் தப்பி ஓட முயன்றனர்.

அப்போது உட்கோட்ட தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தன் தலைமையில் தலைமை காவலர்கள் காளியப்பன், விஜயகுமார் காவலர்கள் தூயவன் ஜெயசூர்யா கொண்ட குழுவினர் இரண்டு வட மாநில இளைஞர்களை விரட்டி பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குட்கா பொருட்களை விற்பனைக்காக பொன்னமராதி பகுதிக்கு கொண்டு வந்ததாகவும் கூறினர். இதனையடுத்து அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அரசால் தடை செய்யப்பட்ட 360கிலோ ஹான்ஸ், 80கிலோ கூலிப், 45விமல், உள்ளிட்ட 487கிலோ குட்கா பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தியிருந்தால் ஜீப், ஐபோன், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து இலுப்பூர் டிஎஸ்பி திவ்யா, இன்ஸ்பெக்டர் பத்மா, சப்இன்ஸ்பெக்டர் சரவணனட ஆகியோர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீப்சிங்(36), அக்பர்கான்(25) ஆகியோரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Gudka ,Dar ,Jeep ,Ponnamarawati ,NORTH ,LUXURY ,NORTH STATE ,PONNAMARAWATI, TAMIL ,TAMIL GOVERNMENT ,Pudukkottai ,District Police ,Superintendent ,Abhishekupta ,
× RELATED சிறுமி பலாத்கார கொலை வழக்கு பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்