துரைப்பாக்கம்: கிழக்கு கடற்கரை சாலை வெட்டுவாங்ேகணியில் புதிதாக எலைட் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் குடியிருப்பு நலச்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால், எதிர்ப்பை மீறி அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா ஆகியோர், பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா, உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது, விரைவில் இங்கிருந்து டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து சென்றனர்.