×

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சாத்தூர், பிப். 10:  சாத்தூரில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால், விரக்தியடைந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
சாத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த சந்திரகாந்த் (32), கூலித்தொழிலாளி. மனைவி சாந்தி (30). இவர்களுக்கு 7 வயது மகள் உள்ளார். குடிப்பழக்கத்துக்கு ஆளான சந்திரகாந்த், தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்தார்.

இதனால், கோபமடைந்த சாந்தி, தனது மகளுடன் தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை சாந்தி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சந்திரகாந்த் வீட்டில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரினேபில், சாத்தூர் டவுன் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Mercenary ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை