×

கள்ளக்காதலில் கணவர் கொலை மனைவி, கள்ளக்காதலன் கைது

தேனி அருகே, கோட்டூரில் உள்ள அரசமரத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (44), அரசு போக்குவரத்து கழக கண்டக்டர். மனைவி மணிமேகலை (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மணிமேகலைக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தாக கூறப்படுகிறது. இதனால், மணிமேகலையை, கணவர் கண்டித்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே மாட்டுக்கொட்டகையில் தூங்கிய ராஜேஷ் கண்ணனை, மணிமேகலையும், மலைச்சாமியும் சேர்ந்து அம்மிக்கல்லைப் போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. வீரபாண்டி போலீசார் ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் மணிமேகலை, மலைச்சாமியை கைது செய்தனர்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ