×

திருப்புத்தூரில் கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு திருப்புத்தூரில் கபடி அணி வீராங்கனைகள் தேர்வு நடந்தது.

திருப்புத்தூர், பிப்.10: திருப்புத்தூர் ஆ.பி.சீ.அ கல்லூரியில் மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணி தேர்வு போட்டி நடைபெற்றது.    
சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சிவகங்கை மாவட்ட ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணி தேர்வு போட்டி திருப்புத்தூரில் நடைபெற்றது. வருகின்ற 19, 20, 21 ஆகிய தேதிகளில் முதுகுளத்தூரில் நடைபெற இருக்கின்ற 47வது மாநில ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு, சிவகங்கை மாவட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு திருப்புத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.    

ஆண்கள் 70 கிலோ எடைப் பிரிவு, பெண்கள் 65 கிலோ எடை பிரிவினருக்கான கபடி அணி தேர்வுக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 164 பேரும், பெண்கள் பிரிவில் 35 பேரும் போட்டியாளர்களாக பங்கேற்றனர். சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் நடைபெற்ற தேர்வு போட்டியில், அமெச்சூர் கபடி கழக மாநில துணைத் தலைவரும், சிவகங்கை மாவட்ட தலைவருமான ஏவி.நாகராஜன் தலைமையேற்று, சிவகங்கை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் மாத்தூர் பாண்டி ஆகியோருடன் போட்டியினை துவக்கி வைத்தார்.
    
இதில் ஆண்கள் 20 பேரும், பெண்கள் 20 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மாவட்ட பயிற்சி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நடத்தப்படும் போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்கள், ஆண்கள் பிரிவில் 12 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் மாநில போட்டிக்கு சிவகங்கை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள்.

Tags : Kabaddi team ,competition ,
× RELATED மாற்றுத்திறனாளிகள் வாள்வீச்சு...