×

8 வது நாளாக தொடர் மறியல் அரசு ஊழியர்கள் 30 பேர் கைது

திருச்சி, பிப். 10: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 2ம் தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 10ம் நாளாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்து கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags : servants ,riots ,
× RELATED தடய அறிவியல் துறையில்...