×

போலி ஆவணத்தில் மின் இணைப்பு டாக்டர், மனைவி மீது வழக்குபதிவு

திருச்சி, பிப். 10:திருச்சியில் போலி ஆவணம் தயார் செய்து மின் இணைப்பு பெற்ற டாக்டர் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை திருவேற்காடு சிவன் கோவில் ரோட்டை சேர்ந்தவர் சுமையா (65). இவர் திருச்சி மாநகர துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பது, எனக்கு திருச்சி கருமண்டபம் ஜெய நகரில் சொந்தமாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் சென்னை திருவேற்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த டாக்டர் மாரிமுத்து என்பவர் (தற்போது கருமண்டபம் ஜெய நகரில் வசித்து வருகிறார்) மருத்துவமனை வைத்து நடத்துவதாக கூறி கடந்த 2016ல் ஒப்பந்தம் போட்டார். இதையடுத்து ரூ.1 லட்சம் அட்வான்ஸ் தொகையில் மாதம் ரூ.18 ஆயிரம் வாடகை என ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் எனது கையெழுத்தில் போலியாக ஆவணங்கள் தயாரித்து மருந்து பெற்றும், சோப்பு கம்பெனிக்காக மின் இணைப்பு பெற்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநகர குற்றப்பிரிவிற்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து டாக்டர் மாரிமுத்து, இவரது மனைவி வீரஜோதி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் நாஞ்சில்குமார் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி