×

யாத்ரி நிவாஸில் தங்க இன்று முன்பதிவு துவக்கம்



திருச்சி, பிப்.10: திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு  சொந்தமான பஞ்சக்கரை சாலையில் யாத்ரிநிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது. கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த யாத்ரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று (10ம் தேதி) முதல் மீண்டும் தங்கும் விடுதி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. எனவே ரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு இன்று முதல் ஆன்லைனில் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Booking ,Yatri Niwas ,
× RELATED டிக்கெட் முன்பதிவு மையம் இன்று மதியம் வரை மட்டுமே