நாமக்கல், பிப். 10: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 3,500 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில் ஏலத்தை நடத்தினர். இதில் பருத்தி குவண்டால் ₹2,910 முதல் ₹9,009 வரை ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக ₹85 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.