திருச்செங்கோடு, பிப். 10: திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்டோ மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் பங்கேற்றனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், குணசேகரன் ஆகியோர் ஓட்டுனர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையில், ஓட்டுனர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர்.