×

மின்ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்,பிப்.10: நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை  பொறியாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு  நடவடிக்கைக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார். இதில் தொழிற்சங்கங்களை  தொடர்ந்து அவமதிக்கும் போக்கை கைவிட வேண்டும். மின்வாரிய பணிகளை ஒப்பந்த  முறையில் தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது. மின் விநியோகத்தை தனியாரிடம்  ஒப்படைக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கோரிக்கையை  விளக்கி கோஷமிட்டனர்.

Tags : Demonstration ,electricians ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்