×

ராணுவ வீரர் மனைவி தீக்குளித்து தற்கொலை

கிருஷ்ணகிரி, பிப்.10:குருபரப்பள்ளி அருகே பெரியகொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (30). இவர் ஜம்முகாஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி  வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர், கடந்த 5ம் தேதி மாலை மதுஅருந்தி விட்டு வந்துள்ளார்.  இதனை அவரது மனைவி சத்யா (25) கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு  ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சத்யா, மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். படுகாயமடைந்த அவர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

Tags : soldier ,Army ,suicide ,
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...