×

தொழில் அதிபர் சிறையில் அடைப்பு

ஓசூர்,பிப்.10: உத்தனப்பள்ளி அருகே பெண் தொழில் அதிபர் நீலிமா, அவரது கார் டிரைவர் முரளி ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் காரில் வந்த போது கூலிப்படை லாரியை மோத விட்டு கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி 2 பேரையும் கொலை செய்தனர். இது தொடர்பாக 13 பேர் கைதான நிலையில், தொழில் அதிபர் ஜெ.ஆர். என்கிற ராமமூர்த்தி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.அவரை போலீசார் நேற்று முன்தினம் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 நாள் போலீஸ் காவல் முடிந்து நேற்று மாலை ஜெ.ஆர். மீண்டும் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Business tycoon ,
× RELATED தொழில் அதிபர் இல்ல திருமணம் எம்பி, எம்எல்ஏக்கள் நேரில் வாழ்த்து