×

திம்பம் மலைப்பாதையில் பஸ் பழுதாகியதால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்,  பிப். 10:   திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ் பழுதாகி நின்றதால்,ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன்  கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய  திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பஸ்  மற்றும் சரக்கு வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது.நேற்று காலை 8  மணியளவில் மைசூரிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ்  சென்று கொண்டிருந்தது.

அப்போது பஸ் 7வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது பஸ்சின்  அடிப்பகுதி தார்சாலையில் முட்டி நகரமுடியாமல் நின்றது. இதன் காரணமாக  மலைப்பாதையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.  பயணிகள் அனைவரும் சேர்ந்து பஸ்சை நகர்த்தி நிறுத்தியபின் போக்குவரத்து  சீரானது. இதன் காரணமாக ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.    நேற்று மாலை 4 மணியளவில் 15வது கொண்டை ஊசி வளைவில் லாரி  பழுதடைந்து நின்றதால், பஸ் உள்ளிட்ட 6 சக்கர வாகங்கள் மட்டும்  இயக்கப்பட்டது. சரக்கு லாரிகள் செல்ல முடியாமல் மலைப்பாதையில் அணிவகுத்து  நின்றன.

Tags : bus breakdown ,Thimphu Hill Road ,
× RELATED திம்பம் மலைப்பாதையில் காய்கறி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து