×

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி 8வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் மறியல்

தஞ்சை, பிப்.10: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து 8வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தஞ்சாவூரில் கடந்த 2 ம் தேதி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8வது நாளாக நேற்று தஞ்சாவூர் மணிமண்டபம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கோதண்டபாணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 65 பெண்கள் உட்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : strike ,cancellation ,Government Employees Unions ,
× RELATED சிவகாசி அருகே சாலை அமைக்க கோரி மக்கள் மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை