×

எல்லப்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

அன்னூர், பிப்.10: கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைபாளையம்-  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கள் ஆய்வுகளை காட்சிக்கு வைத்தனர். அதில், அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் 6 பேர் சேர்ந்து மின்சாரம் இல்லாமல் இயங்கும் துணி துவைக்கும் கருவியை கண்டுபிடித்தனர். இவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2500 ரொக்கமும், சான்றும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு எல்லப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பவளக்கொடி, வழிகாட்டி ஆசிரியர் ஜெகதாம்பாள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Appreciation Ceremony ,Ellapalayam ,Government School Students ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்