×

கீரனூர் அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு

புதுக்கோட்டை, பிப். 10: கீரனூர் அருகே பெண்ணிடம் செயினை பறித்து சென்ற 2 மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே நாஞ்சூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ரெங்கம்மாள் (35). இவர் நேற்று முன்தினம் டூவீலரில் பெருமாநாடு கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். சத்தியமங்கலம் தனியார் கல்லூரி அருகே சென்றபோது டூவீலரில் வந்த 2 மர்மநபர்கள், ரெங்கம்மாளை மறித்து அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தனர். பின்னர் அவர்கள் வந்த பைக்கில் தப்பி சென்றனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீசில் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Keeranur ,
× RELATED நடந்து சென்ற முதியவர் மயங்கி விழுந்து சாவு