×

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு

ஈரோடு, பிப். 10: ஈரோட்டில் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று துவங்கியது. இதில் 40 பேர் பங்கேற்றனர்.
அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் பணிநாடுநர் பட்டியல் பெறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடம் 120. டி.ஆர்.பி மூலம் ஈரோடு மாவட்டத்திற்கு 74 பேர் இடம் பெற்றிருந்தனர்.

ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில் அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று முன்தினம் நடந்தது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு பணி ஒதுக்கீடு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வுக்கு ஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று துவங்கியது. இதில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களுக்கு கலந்தாய்வு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தலைமையில் நடந்தது. இதில், 40பேர் பங்கேற்றனர். இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.

இதேபோல், இன்று (10ம் தேதி) கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர்வேதியியல் பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வு முழுமையாக முடிந்தவுடன் பணி நியமன ஆணை வழங்கப்படும். பணி ஆணை பெற்றவர்கள் வரும் 12ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Postgraduate Teacher Workplaces ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் 48...