×

மாநில நிர்வாகிகள் கைதை கண்டித்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,பிப்.10: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கைதை கண்டித்து பெரம்பலூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடி வரும் ஜாக்டோ-ஜி யோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20க்கும் மேற்பட்டோரை தமிழக அரசு கைதுசெய்த நடவடிக்கையை கண்டித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜெக்டோ ஜியோ கூட்ட மைப்பின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமர், கலியமூர்த்தி, இளங்கோவன் ஆகியோர் கூ ட்டாகத் தலைமை வகித்தனர். இதில் தமிழ்நாடு அரசு ஊ ழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்சங்க மாவட்ட தலைவர் பாரதி வளவன், மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநில தணிக்கையாளர் ராஜராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags : protests ,arrest ,Jakto-Jio Coalition ,state executives ,
× RELATED தேர்தல் நேரத்தில் மேலும் 4 அமைச்சர்களை...