×

2 பெண்கள் மாயம்

மயிலாடுதுறை, பிப். 10: மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலை சுமைதாங்கி தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி மகள் ஆன்சி (24). இவர் கடந்த 2ம் தேதி காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறினார். ஆனால் அவர் காரைக்காலுக்கு செல்லவில்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். அதேபோல் மயிலாடுதுறை முதலியார் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகள் முபர்னா (21) என்பவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தவர் கடந்த 31ம் தேதி மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...