×

அரசு ஊழியர் சங்கத்தினர் 8வது நாளாக சாலை மறியல்

மயிலாடுதுறை, பிப். 10: மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் நேற்று 8வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு துறையி–்ல் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் நேற்று 8வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாவட்ட பொறுப்பாளர் லதா தலைமையில் திரளானோர் பங்கேற்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 19 பெண்கள் உட்பட 35 பேரை மயிலாடுதுறை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Tags : Government Employees Union ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்